இது சௌமியா என்னிடம் சொன்னா அவள் தோழியின் கதை. அதை நான் அப்படியே அவள் சொன்னதைப் போலவே எந்த மாற்றமுமின்றி எழுத முற்படுகிறேன், இந்த கதையை நான் கேட்டபோது என் தோழியின் கதையும் இப்படியானதாகவே இருப்பது உரைத்தது, என் தோழியின் கதையை யோசிக்கும் போது நான் கதையில் மிக முக்கிய பாத்திரத்தை வகிக்கிறேன் என்பதை உணர்கிறேன்.நான் சௌமியாவினுடைய தோழியின் கதையை தான் எழுதப்போகிறேனா இல்லை எழுதப்போவது என் தோழியின் கதையா ? இல்லை இது என் வாக்குமூலமா?. மேலும் இப்பிரதி கதையல்ல உலகத்தின் எங்கோ ஓர் இடுக்கில் இப்படியான சம்பவம் நடந்தது, நடந்துக்கொண்டே இருக்கிறது சொல்லப்போனால் இது உங்களின் கதையாகவும் இருக்கலாம், இப்பிரதியை படிப்பதும் படிக்காமல் கழிவென ஒதுக்கி தள்ளுவதும் உங்கள் விருப்பம். படித்துமுடித்தவுடன் இதேப்போலான ஓர் கதையை அல்லது சம்பவத்தை நீங்கள் ஏற்கனவே அறிந்ததைப்போலவும் தோன்றலாம் அதுனாலே என்னை என் பிரதியுடன் சேர்த்து நிராகரிக்கலாம், எப்படியாயினும் நான் சொல்லப்போகும் சௌமியாவின் தோழி கதையும், என் தோழியின் கதையும், என் வாக்குமூலதையும் சௌமியாவின் தோழியே பின்வருமாறு சொன்னார் இதயம் இத்துனை வேகமாய் துடிக்கும் என்பதை இப...