இளவேனில், சில பல வருடங்களுக்கு முன் சினிமா கனவுடன் சென்னை நகருக்கு வந்தான். தான் எடுக்கும் படம் உலகின் மிக சிறந்த சினிமாவாய் இருக்கும் என்றும், இந்த உலகம் காணதா பல புரட்சிகளை அந்த படம் செய்யும் என்றும் நம்பினான். அவனை சொல்லி என்ன செய்ய, அவன் பார்த்து வளர்ந்த கேப்டன் படங்களும், சூப்பர் ஸ்டார் படங்களும் அவனுக்கு கொடுத்த நம்பிக்கைகள் அவை. நல்ல வேளை, கால சூழ்நிலையால் வேறு வேலை பார்க்கிறான். நாம் தப்பித்தோம். விஜிக்கு, மணிரத்தினமும் பாலாவும் ஆதர்ச மனிதர்கள். அவர்களை பார்த்து தான் சினிமா எடுக்க வந்தேன் என்பான். மௌன ராகத்தை போன்றோ, பிதாமகனைப் போன்றோ ஒரு படம் எடுத்துவிட வேண்டும் என்பது அவன் லட்சியம். இன்று ஒரு பிரபல் தொலைகாட்சியில்..குடும்ப சண்டைகளை வீதிக்கு இழுத்து அவர்களின் கண்ணீரை காசாக்கும் வேலையில் இருக்கிறான். காட்சி ஊடகமே ஊடக கலையின் உச்சம், உலகம் காணாத அத்துணை மாற்றங்களையும் நிகழ்த்தும் வலிமை காட்சி ஊடகத்துக்கு இருக்கின்றது. எழுத்து ஊடகம் காலாவதியான விடயம். விசுவல் மீடியா முன் ஒரு சிறு அணுவிலும் தகுதியற்றது எழுத்து எனும் பின்பத்தை நான் சந்திக்கும் பெரும்பான்மையான நண்பர்கள் சொல்லுகிறார...