Skip to main content

Posts

Showing posts from May, 2013

விஷுவல் மீடியா எனும் கலை (?)

இளவேனில், சில பல வருடங்களுக்கு முன் சினிமா கனவுடன் சென்னை நகருக்கு வந்தான். தான் எடுக்கும் படம் உலகின் மிக சிறந்த சினிமாவாய் இருக்கும் என்றும், இந்த உலகம் காணதா பல புரட்சிகளை அந்த படம் செய்யும் என்றும் நம்பினான். அவனை சொல்லி என்ன செய்ய, அவன் பார்த்து வளர்ந்த கேப்டன் படங்களும், சூப்பர் ஸ்டார் படங்களும் அவனுக்கு கொடுத்த நம்பிக்கைகள் அவை. நல்ல வேளை, கால சூழ்நிலையால் வேறு வேலை பார்க்கிறான். நாம் தப்பித்தோம். விஜிக்கு, மணிரத்தினமும் பாலாவும் ஆதர்ச மனிதர்கள். அவர்களை பார்த்து தான் சினிமா எடுக்க வந்தேன் என்பான். மௌன ராகத்தை போன்றோ, பிதாமகனைப் போன்றோ ஒரு படம் எடுத்துவிட வேண்டும் என்பது அவன் லட்சியம். இன்று ஒரு பிரபல் தொலைகாட்சியில்..குடும்ப சண்டைகளை வீதிக்கு இழுத்து அவர்களின் கண்ணீரை காசாக்கும் வேலையில் இருக்கிறான். காட்சி ஊடகமே ஊடக கலையின் உச்சம், உலகம் காணாத அத்துணை மாற்றங்களையும் நிகழ்த்தும் வலிமை காட்சி ஊடகத்துக்கு இருக்கின்றது. எழுத்து ஊடகம் காலாவதியான விடயம். விசுவல் மீடியா முன் ஒரு சிறு அணுவிலும் தகுதியற்றது எழுத்து எனும் பின்பத்தை நான் சந்திக்கும் பெரும்பான்மையான நண்பர்கள் சொல்லுகிறார...

ஒரு குடியு(கனவு)லகவாசியின் பயணக்குறிப்புகளிலிருந்து: இயற்கையின் சொந்த தேசத்து பயணக் குறிப்புகள்.

நீங்கள் வெளியூருக்கு பயணம் மேற்கொள்ளுகிரீர்கள். பத்து மணி நேர ரயில் பயணம். மது அருந்திவிட்டு தான் எந்த ஒரு பயணத்தையும் தொடங்குபவர் எனில், அருகில் இருக்கும் டாஸ்மாக் மதுபான கூடத்துக்கு போய் ஒரு புட்டி மது அருந்துகிரீர்கள். மது புட்டியின் விலை 600, உங்களிடம் வசூலிக்கும் பணம் 620 கூடவே பிளாஸ்டிக் கிளாஸ் 5 ரூபாய், தண்ணீர் குடுவை 20 ரூபாய், தின்பண்டங்கள் 100 ரூபாய் ஆக மொத்தம் 745 ரூபாய். எச்சில் குவியல்களுக்கும், வாந்தியின் மிச்சங்களுக்கும் நடுவே குடித்து முடித்துவிட்டு புறப்படுகிரீர்கள். அதிகாலை மணி 4, ரயில் கல்லிக்கோட்டை (கோழிக்கோடு) ரயில் நிலையத்தில் நிற்கிறது, ரயிலை விட்டு இறங்குகிரீர்கள். வாஸ்கோடகாமாவை வரவேற்ற அதே கேரளத்து காற்று உங்களையும் வரவேற்கிறது. காற்றில் கோடையின் உக்கிரம் தெரிகிறது. சென்னை மாநகரிலிருந்து எப்போதும் கேரளம் போனாலும் ஆட்டோக்களின் ரூபத்தில் பேரதிர்ச்சி காத்துகிடக்கும். 15 ரூபாய்க்கு ஆட்டோவில் பயணிக்க முடியும் என்பதை உங்களால் நிச்சயம் நம்ப முடியாது தான். 15 ரூபாய் ஆட்டோ பணம் கொடுத்துவிட்டு நடக்க ஆரம்பிக்கிரீர்கள். அங்கிருந்து உங்கள் பயணம் வயல் நாட்டை(வயநாடு) நோக்கி...

நானும் கடவுளும் இருபத்தாறு ஆண்டுகளும்: சமயம்- கடவுள் குறித்தான் ஞானியின் படைப்புகளை முன்வைத்து

நான் அப்போது உயர்நிலைக்கல்வி படித்துக்கொண்டிருந்தேன். நம் கல்வி முறை எல்லா மாணவர்களுக்கு தரும் அதே துயரங்களை, வலிகளை எனக்கும் அள்ளி வழங்கிக்கொண்டிருந்தது. மதிப்பெண்கள், பொறியியல் கல்வி எனும் சாத்தான்கள் என்னை துரத்தியவாறே இருந்தன. பள்ளிக்கு போகும், படிக்கும் ஆர்வம் இல்லாமல் படித்துக்கொண்டிருந்தேன், கடும் மனசோர்வாலும் பாதிக்கப்பட்டிருந்தேன், ஒருநாள் உடல்சோர்வு காரணமாய் வீட்டில் மயங்கி விழுந்தேன். அம்மாவும், அப்பாவும் பதறியடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு என்னை அழைத்து சென்றார்கள். அவர்களின் பயம் என் மனதில் அப்படியே பதிந்து விட்டது. சில நாள் கழித்து மயங்கி கிடப்பதை போன்று நடித்தேன், அன்றும் பெற்றோர்களின் கண்களில் அதே அச்சம் தெரிந்தது. என் திட்டம் வேலை செய்தது, தொடர்ந்து மயங்கி விழ ஆரம்பித்தேன். அதுவும் எல்லாம் திட்டம் போட்டு செய்தேன். நான் நடிக்கிறேன் என்பதை அவர்கள் கண்டுபிடிக்க முடியதப்படி அவர்கள் நினைத்து பார்க்க முடியாத இடங்களில் விழுந்து கிடப்பேன். மலக் காடு, வயல்வெளி, வீட்டு வாசல் என்று தொடர்ந்தது என் திட்டம். என் அம்மாவும், அப்பாவும் எத்தனையோ மருத்துவமனைகள் அழைத்து சென்றார்கள் எல்லா ...