Skip to main content

Posts

Showing posts from December, 2014

உரையாடல்கள்

   நான் இதுவரை யார் யாருடன் முயங்கினேன் என்பதை யாரிடமும் சொன்னது இல்லை ஆனால் உன்னிடம் சொல்ல எனக்கு எந்த தயக்கமும் இருக்கவில்லை. உன்னுடன் இந்த உலகை பற்றி, வாழ்க்கையை பற்றி, காமம் பற்றி, சுய இன்பம் பற்றி, கொக்கையின் பற்றி பேசமுடிகிறது. அதை பங்கிட்டுக்கவும் முடிகிறது, ஏனெனில் உனக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை.. நாம் நண்பர்களோ, காதலர்களோ அல்லது வேறு எதுவும் இல்லை. நீ சொல்வதைப் போல் நான் ஹூக்காவாகவும், நான் சொல்வதைப் போல் நீ கடலாகவும் இருக்கிறோம். ஆம்! நீ சொல்வது சரி தான். நான் இதுவரை எத்தனையோ மனிதர்களை கடந்து வந்துள்ளேன் ஆனால் யாரிடமும் ஈர மண்னின் வாசனையை நுகர்ந்தது இல்லை, நீயோ புது மழை நாளின் முடிவில் ஊறிப்போன மண்னைப் போல் வாசம் தருகிறாய். உன்னுடனான காமமும் அப்படியானதாக தான் இருக்கிறது. ஏரு உழுத வயலில் வெடித்து கிடக்கும் விளை மண்னை அள்ளி தின்பதான அதனுடன் கூடுவதான உணர்வை தான் நான் பெருகிறேன். ************************************************************************* நாம் எங்கே போகிறோம்? எங்கே போகிறோம் என்று தெரிந்தால் தான் வருவாயா? என் உதடுகள் உன் முதுகில் அழுத்தமாய் பதிந்தன. சில...