கசக்கி வீசியெறியப்பட்ட, ஒரு கிழிந்துப்போன இரவின் சிதறல்களில் அழைந்துக் கொண்டிருக்கும் வார்த்தைகளை ஒன்று திரட்டி இப்பிரதி உருவம் கொள்கிறது…..அதிரூபன் உலகை காக்க புறப்பட்ட ஏழாவது நாளில் ஆரம்பித்த அந்த கதை 2007 ஆம் வருடம் மார்ச் திங்கள் ஆறாவது நாளில், சூரியன் அஸ்தமித்து 4 மணி நேரங்கள் கடந்த ஒரு இரவில் தொடைகளின் இடுக்குகளில் வழிந்துக்கொண்டிருக்கும் அவளின் குருதியில் நிலைக்கொண்டது. ஓநாயின் முனங்களுடன் யாரென்றே தெரியாதா அவளின் ஆன்மாவை புசித்த களைப்பின் எச்சங்கள் உதிரும் முன்னே, அடியாழத்தில் மிச்சம் கிடக்கும் அவளின் சுயத்தை, குறிகளைச் சுற்றி நீண்டு கிடக்கும் தன் நகங்களை கொண்டு கீற ஆரம்பித்தான் அவன். வழியும் கண்ணீரின் ஓசை புலப்படாது அழுதுக்கொண்டிருந்தாள் அவள். பிள்ளை பருவத்தில் பன மரத்தடியில் பனங்காய் சுட்டுக்கொண்டிருந்த போது அடி வயிற்றில் எழுந்த பெரும் வலியாலும், கால்களின் இடுக்கில் ஏற்பட்ட பிசுபிசுப்பிலும் பயந்துப் போய் அம்மாவிடம் ஓடிய போது ‘குத்த வைத்து’ அம்மா சொன்ன வார்த்தைகள் அவள் காதுகளில் இப்போதும் ’ஓ’வென்று பாய்ந்துக் கொன்டிருந்த...