Skip to main content

Posts

Showing posts from April, 2014
                கசக்கி வீசியெறியப்பட்ட, ஒரு கிழிந்துப்போன இரவின் சிதறல்களில் அழைந்துக் கொண்டிருக்கும் வார்த்தைகளை ஒன்று திரட்டி இப்பிரதி உருவம் கொள்கிறது…..அதிரூபன் உலகை காக்க புறப்பட்ட ஏழாவது நாளில் ஆரம்பித்த அந்த கதை 2007 ஆம் வருடம் மார்ச் திங்கள் ஆறாவது நாளில், சூரியன் அஸ்தமித்து 4 மணி நேரங்கள் கடந்த ஒரு இரவில் தொடைகளின் இடுக்குகளில் வழிந்துக்கொண்டிருக்கும் அவளின் குருதியில் நிலைக்கொண்டது. ஓநாயின் முனங்களுடன் யாரென்றே தெரியாதா அவளின் ஆன்மாவை புசித்த களைப்பின் எச்சங்கள் உதிரும் முன்னே, அடியாழத்தில் மிச்சம் கிடக்கும் அவளின் சுயத்தை, குறிகளைச் சுற்றி நீண்டு கிடக்கும் தன் நகங்களை கொண்டு கீற ஆரம்பித்தான் அவன். வழியும் கண்ணீரின் ஓசை புலப்படாது அழுதுக்கொண்டிருந்தாள் அவள். பிள்ளை பருவத்தில் பன மரத்தடியில் பனங்காய் சுட்டுக்கொண்டிருந்த போது அடி வயிற்றில் எழுந்த பெரும் வலியாலும், கால்களின் இடுக்கில் ஏற்பட்ட பிசுபிசுப்பிலும் பயந்துப் போய் அம்மாவிடம் ஓடிய போது ‘குத்த வைத்து’ அம்மா சொன்ன வார்த்தைகள் அவள் காதுகளில் இப்போதும் ’ஓ’வென்று பாய்ந்துக் கொன்டிருந்த...

இணையதளங்களின் அரசியல் - இளவேனில், லிவின் அனுஷ்யன்

              தொழில்நுட்ப வளர்ச்சியின் பெரும் கொடையான இணையம் மனிதனுக்கு கிட்டிய அதித சக்தி மட்டுமல்ல, இன்றைய மானிட இருப்பின் அச்சாணியாக இருக்கிறது. முதலாளிகளால் உருவாக்கப்பட்ட மிகப்பெரும் சுதந்திர வெளி என்பது தான் இணையத்தின் மாபெரும் நகை முரண்.இன்று சமூகத்தின் இயங்கியலில் மனிதனோடு பின்னிப் பிணைந்திருக்கும் அம்சங்களில் ஒன்று இணையம். அது சமூக வளைத்தளங்கள் , வணிகத் தளங்கள், மெய்நிகர் உலகம்(virtual world), தேடல் பொறிகள், வரைபடங்கள், வழிகாட்டிகள் என மனித செயல்பாடுகளின் அத்தனை வேகத்திலும் ஊடுருவியாகிவிட்டது. நினைவிலி மனம் இருக்கும் இடம் மனிதனின் மூளை என்பதின் இடத்தை பெயர்த்தெடுத்து இணையத்துக்குள் பொருத்தி வைத்துவிட்டதான காலத்தில் வாழ்கிறோம். இணையம் தரும் வசதிகளோடு சேர்ந்த உளவியல் சிக்கல்கள், சமூகத்தின் பொதுத்தன்னைமையில் அல்லது பழக்கவழக்கங்களில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள், நவீன மனதின் சிதைவுகள் பற்றி ஆராயப்பட வேண்டிய தேவை இதில் உள்ளது. சமூகவியலில் எண்ணியல் சமூகவியல்( Digital sociology). தனியொரு பிரிவாக மாறியுள்ளது.           தனி மனிதர்கள...