Skip to main content

Posts

Showing posts from November, 2014

அபிரதிகள்!

ஊழிக்காலம் சாம்பல் நிறத்திலான மரணத்தின் சொற்கள் கடவுளர்களின் ஆசியுடன் அந்த நகரத்தின் வீதிகளில் வியாபித்திருந்ததை அவர்கள் பார்த்துக் கொண்டே ஓடினார்கள். நீண்டு கிளை பரப்பியிருந்த கருமையின் விரல்கள், வீழ்ந்துகிடந்த உடல்களின் எரிந்துபோன ஆன்மாக்களை சேகரித்துக் கொண்டிருந்தன. சிவப்பேறிய தன் தங்கக் கரங்களால் அரசர் பறக்கவிட்டுக் கொண்டிருந்த வெள்ளைப் புறாக்கள் அந்த தீவு தேசத்தின் வான்வீதிகளினூடே பயணித்து வடக்கின் மூலையில் நிலை கொண்டிருந்த எரிந்துபோன ஆன்மாக்களின் நாசியில் எச்சமிட்டுப் பறந்ததை மேலை தேசத்து அரியணைகள் கம்பளம் விரித்து ஆரவாரம் செய்த அதே நொடியில்தான், இரும்பு பறவையின் கடைசி அமிலமுட்டை மிச்சமிருந்த ஒரே ஒரு சிறுமியின் கன்னத்தில் முத்தி வெடித்ததில் சிதறிய அவளின் இடதுகால் பெருவிரல் அரசரின் தங்கக் கைகளில் போய் விழுந்து ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. அரசர், சமாதானத்தின் சின்னமாய் அழுகிப்போன அவள் இடதுகால் பெருவிரலினைத் தன் கிரீடத்தில் பதித்து வைத்திருப்பதை அந்தக் கிழவியின் கதை மீண்டும் எனக்கு நினைவுபடுத்திச் சென்றது……. குட்டிதேவதை குட்டிதேவதையை தரிசித்தல் என்பது வார்த்தைகளால் மிகைப் படுத்தப்பட்ட கன...