அன்புள்ள அப்பா, நிச்சயம் இந்த கடிதத்தை நீங்கள் எதிர்பார்த்திருக்கமாட்டீர்கள், அதே போல் இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுவேன் என்று கனவிலும் எண்ணியதில்லை. இக்கடிதம் தான்தோன்றியாய் எழுதப்பட்டதே ஆயினும், சொல்ல தெரியாத ஒரு பெரும் உனர்ச்சியின் விளைவால் வெளிப்படுகிறது . அதித உணர்வில் வெளிப்படும் இந்த கடிதம் அன்பினாலும், பாசத்தாலும் நிரம்பியது என்று என்னும்படி அமைந்திருந்தால், இங்கு வெளிபட்டிருக்கும் வார்த்தைகள் அனைத்தும் உலகின் மாபெரும் நடிப்பு கலையை உங்கள் முன் வெளிப்படுத்துகின்றன என்றே அர்த்தம். அன்பு, பாசம் போன்ற சொற்கள் தானே மானுட படைப்பிலே அதிக புனைவு நிரம்பியவை, கடவுளை காட்டிலும் அற்புத புனைவுகள் இவை. இருந்தும் மனிதன் வாழ புனைவுகள் எப்போதும் தேவைப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. நீங்கள் இந்த கடிதத்தை படிப்பீர்கள் எனும் நம்பிக்கையில் நான் எழுதவில்லை, ஒரு தேசாந்தரியிடம் இதை எதிர்பார்ப்பது அபத்தமான விடயம் தான். உங்களால் அதிகம் நேசிக்கப்பட்ட, அதே நேரம் உங்களை பெரிதும் நேசிக்காத உங்கள் மகன் தான் இந்த கடிதத்தை எழுதிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் என்னுடன் இருக்கும் போது சொல்லப்படாத, உங்களுடன் பேச விர...