Skip to main content

Posts

Showing posts from September, 2013

தான்தோன்றியாய் எழுதப்பட்ட ஒரு பிரதிக்கு என்ன தலைப்பை கொடுத்துவிட முடியும்?

அன்புள்ள அப்பா, நிச்சயம் இந்த கடிதத்தை நீங்கள் எதிர்பார்த்திருக்கமாட்டீர்கள், அதே போல் இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுவேன் என்று கனவிலும் எண்ணியதில்லை. இக்கடிதம் தான்தோன்றியாய் எழுதப்பட்டதே ஆயினும், சொல்ல தெரியாத ஒரு பெரும் உனர்ச்சியின் விளைவால் வெளிப்படுகிறது . அதித உணர்வில் வெளிப்படும் இந்த கடிதம் அன்பினாலும், பாசத்தாலும் நிரம்பியது என்று என்னும்படி அமைந்திருந்தால், இங்கு வெளிபட்டிருக்கும் வார்த்தைகள் அனைத்தும் உலகின் மாபெரும் நடிப்பு கலையை உங்கள் முன் வெளிப்படுத்துகின்றன என்றே அர்த்தம். அன்பு, பாசம் போன்ற சொற்கள் தானே மானுட படைப்பிலே அதிக புனைவு நிரம்பியவை, கடவுளை காட்டிலும் அற்புத புனைவுகள் இவை. இருந்தும் மனிதன் வாழ புனைவுகள் எப்போதும் தேவைப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. நீங்கள் இந்த கடிதத்தை படிப்பீர்கள் எனும் நம்பிக்கையில் நான் எழுதவில்லை, ஒரு தேசாந்தரியிடம் இதை எதிர்பார்ப்பது அபத்தமான விடயம் தான். உங்களால் அதிகம் நேசிக்கப்பட்ட, அதே நேரம் உங்களை பெரிதும் நேசிக்காத உங்கள் மகன் தான் இந்த கடிதத்தை எழுதிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் என்னுடன் இருக்கும் போது சொல்லப்படாத, உங்களுடன் பேச விர...

சிதைவு

1 யாருமே இல்லாத அந்த ஒற்றை அறையில் நான் மட்டுமே இரண்டு வருடங்களாய் வாழ்ந்து வருகிறேன். ஆஸ்பெஸ்தாஸ் அட்டையும், உதிருந்து போன சுண்ணாம்பு சுவரும், பேருக்கு ஓடிக்கொண்டிருக்கும் மின்விசிறியும், சிலந்தி அட்டடைகளும் என் அறையின் அடையாளங்கள்.யாருமில்லாத இந்த அறை எப்போதும் வெட்கை சூழ்ந்தே இருக்கிறது, மழை நாட்களிலும் வெட்கை வெளியே செல்ல மறுக்கிறது, நானும் அதனுடன் சேர்ந்து வாழ பழகிவிட்டேன். இப்போதெல்லாம் குளிர்ச்சியை மனமும், உடலும் விரும்புவதேயில்லை, எங்காவது குளிருட்டப்பட்ட கட்டிடங்களுக்குள் நுழையும்போதெல்லாம் என்னுடல் அன்னியப்பட்டு உதறுகிறது. நான் ஏற்கனவே சொன்னதைப்போல் இந்த அறைக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகிறது. அப்போது ஒரு கால் சென்டரில் வேலை செய்துக்கொண்டிருந்தேன். எட்டாயிரம் ரூபாய் சம்பளம், மூனு வருடங்கள் அங்கு வேலை செய்தேன். ஆறாயிரம் சம்பளத்துக்கு வேலையில் சேர்ந்தேன் பிறகு படிப்படியாய் சம்பளம் எட்டாயிரத்தை தொட்டது. உங்களுக்கு திடிரென்று கேள்வி தோன்றலாம் நான் பொய் சொல்லவதாய் கூட தோன்றலாம் ஆனால் அது தான் நிஜம் நான் ஆறாயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்து அதிகபட்சமாய் மூன்று ஆண்டுகளுக்கு ...