// என் வாழ்வில் நான் பார்த்த மிக உன்னதமான மக்கள் போராட்டமான கூடங்குளம் போராட்ட குழந்தைகளுக்கு சமர்ப்பணம் // அன்புள்ள ரோசி, நீ எப்படி இருக்கிறாய். நிச்சயம் நீ நலமாக இல்லை என்று எனக்கு தெரியும். என்னை போலான ஒரு சாவினை விரும்பாமல் நீ போராடுகிறாய். அதற்கு பதிலாய் உன்னை அடிக்கிறார்கள், பட்டினி போடுகிறார்கள், துப்பாக்கி வைத்து மிரட்டுகிறார்கள் உன்னை தீவிரவாதி என்று முத்திரை குத்துகிறார்கள், உன் மீது தேச துரோக வழக்கு போடுகிறார்கள். இருந்தும் நீ அஞ்சாமல் போராடுகிறாய் உன்னை வெல்ல முடியாமல் திணறுகிறது உன் அரசு. நான் மரணிக்கும் போது உன் வயது தான் எனக்கு, இப்போது உயிரோடு இருந்திருந்தால் உன் பாட்டி வயதிருக்கும். அது ஒரு கடும் போர்க்காலம் பெரும் சப்தங்களும், புகைகளும், கண்ணீரும், மரணங்களும் நிறைந்து ஆட்சியாளர்களின் ஆணவத்தால் எங்கள் வாழ்க்கை தோற்றுக்கொண்டிருந்த காலம் அது. போர் நிரம்பிய ஒரு நாளில் தாயின் கருவறையை விட்டு வெளியே வந்தேன், வராமலே இருந்திருக்கலாம். என் அம்மாவின் கருவறையே அதிரும் இரைச்சல்களில் வாழ பழகிக்கொண்டேன். ஒரு நாள் நாங்கள் யாரும் எதிர்பாரா நேரத்தில் ஒரு பெரிய இரும்...