Skip to main content

Posts

Showing posts from May, 2014

துரோகியின் கதையில் இரண்டு அத்தியாயங்கள்

                                                                                          01     துரோகியாக வாழ்வது என்பது மிகவும் இலகுவான ஒன்றாகவே இருக்கிறது. தினசரி நிகழ்வுகளில் பெரிய வித்தியாசங்கள் ஏதுமில்லை, எப்போதும் போல்தான் சுழல்கிறது என் உலகம். ஆனால் ரட்சிப்பவர்கள் இல்லாமல், தியாகிகள் இல்லாமல், புனிதர்கள் இல்லாமல் வாழ்வது மிகவும் அற்புதமாக இருக்கிறது என்றே சொல்வேன். சொல்லப்போனால் ஒரு துரோகியின் வாழ்வில் ஒரு மணித்துளியிலும் துரோகம் நிரம்பியிருக்கவில்லை . . மனிதத்தாலும், காதலாலும், அன்பாலும், முத்தங்களாலும், மதுவாலும் நிரம்பிக் கிடக்கிறது என் உலகம். நான் துரோகத்தின் அடையாளத்துடன் வாழவே பெரிதும் விரும்புகிறேன். கல்வாரி மலைகளில் துரோகத்தின் சிலுவையை சுமந்தபடி அலைந்து கொண்டிருந்த அவன், தான் அறிந்த துரோகி ஒருவனைப் பற்றி கேள்விக்கான பதிலொன்றை அப்படிதான் சொ...