Skip to main content

Posts

Showing posts from 2015

நடனத்தின் மிச்ச சொற்கள்!

ஒரு வாட்சப் உரையாடல் :   முன் கதை :   நீயும் நானும் கடைசியாக சந்தித்த அந்த நீண்ட இரவின் நீட்சியாக இப்பயணம் தொடர்ந்துக் கொண்டிருக்கின்றது . அந்த இரவில் தான் உன் இசையின் மூச்சு காற்றில் நான் கரைந்துக் கொண்டிருந்தேன் , உன் பாடல்களில் படிந்து கிடந்த விடுதலையின் வேட்கை இன்று வரை எனக்கு இனம்தெரியாத அச்சத்தையே கொடுத்து கொண்டிருக்கின்றது . குருட்டு பூனையாய் பதுங்கி கிடக்கும் ஆன்மாவினை உயிர்பித்து அதனுள் விடுதலையின் மோகத்தை தூண்டிவிட  எத்தனிக்கும் உனது வரிகளை விட்டு தூரம் ஓடிவிட எத்தனை முயன்றும் முடியாமல் பெருமூச்சுடன் உன் இசையினையே சுற்றி சுற்றி வருகின்றேன் . அன்றைய இரவில் வெயில் தகிக்கும் பாலையின் மூர்கமாய் வழிந்து சிதறிய என் காமம் , நரம்புகள் வழியே கீழிறங்கி வீதியில் அலைந்துக் கொண்டிருந்ததை இப்போதும் நினைவுபடுத்திக்கொள்ள முடிகின்றது ..... நீ ஏதும் அறியாதவள் போல் மொட்டைமாடி சுவரில் சாய்ந்துக் கொண்டு கிட்டார் வாசித்துக் கொண்டிருந்தாய் . நம்மை சுற்றிலும் இருளையும் உன் இசையையும் தவிர வேறெதுவுமிருக்கவில்லை . கருமையான உன் உதடுகளின் ஓரத்தில் புகைந்துக் கொண்டிருந்த சிகரெட்டின் மழை...

படுகொலைக்கு முன்னான சில மணி நேரங்கள்

    ஏதும் செய்வதறியாது நான் அப்படியே அமர்ந்து கிடக்கிறேன் , எத்தனை மணி நேரங்கள் என்று நிச்சயம் தெரியவில்லை . அந்த தகவல் எனக்கு சொல்லப்பட்ட   நொடியிலிருந்து நான் இப்படியே தான் அமர்ந்திருக்கின்றேன் , ஒரு துளிக்கூட அசைவில்லாமல் ஊரின் எல்லையில் அசையாது கிடக்கும் வேடியப்பனை போல் . கண்களில் லேசாக கண்ணீர் வருவதுபோல் இருக்கிறது ஆனால் வரவில்லை வந்தும் ஒரு பயனும் இல்லை . உடல் நடுங்கும் என்று எதிர்பார்த்தேன் ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை , இறுகிப்போன உடலை விட்டு வெளியேறும் மூச்சு காற்றை கூட என்னால் உணரமுடியவில்லை . அதே நேரம் ஒளியற்று , ஆண்டுகளாய் இருண்டு கிடக்கும் அந்த அறையின் காற்றில் பிசுபிசுப்புடன் கலந்திருந்த உயிரின் வெப்பம் என்னை தீண்டி செல்கிறது , சூடான மழைத் துளியை போல் . மூளை சீரற்று யோசித்து கொண்டிருக்கிறது ... அம்மாவின் முலை காம்புகள் , விபத்தொன்றில் மரணித்த நன்பன் , தேர் திருவிழா , அப்பா கைபிடித்து கழனிக்கு கூட்டி சென்ற முதல் நாள் , அவளின் முதல் முத்தம் , இதுவரை முகம் பார்க்காத மகனின் கணவு முகம் , கல்லூரியின் விடுதி அறை , முதல் காமத்தின் வெள்ளை இரவு ... இப்படி சொல்லி ம...

அந்த மலையை பற்றிய இரண்டு ஆய்வு கட்டுரைகள்....

    மேற்கு - கிழக்காக இடைவிடாது சுழன்றுக்கொண்டிருக்கும் அந்த நெடுங்காடு ஆதியின் முதல் கிழமைகளில் மனித மூச்சினை அறிந்திராத வல்லையாக இருந்ததென்று ஆங்கிலோ பாதிரி டானியல் ஈஸ்ட்பெரி தன் வாழ்க்கை குறிப்பில் எழுதிவிட்டு சென்றிருந்தான் .. கானக இலைகளுக்கிடையே பாசியின் நிறம் ஒத்த பச்சை வாசத்தை கொண்டிருந்த குறுஞ்சி மனிதர்கள் வாழ்ந்ததை டானியல் அறிந்திருக்கவில்லை .... பின்னாளில் காப்பி கொட்டையுடன் வந்த பாதிரியின் பேரன் பேட்ரிக் ஈஸ்ட்பெரி , வன மனிதர்களின் பச்சை குருதியினை கொண்டு ஆழிக்கும் பாலைக்குமாய் முடிவற்று நீண்டு கிடக்கும் மலை பூமிக்கு வழித்தடம் சமைத்தான் . இரும்பின் இடைவிடாத ஓசையில் வீழ்ந்து செத்த நிலத்தின் மரங்களுடன் , மனிதர்களும் செத்தார்கள் . பேட்ரிக்கின் மேலாள் அரசிக்கு எழுதிய கடிதத்தில் இப்படி சொல்கிறான் “ மரங்கள் வரிசையாக வெட்டுபட்டு விழும் நேரத்தில் எங்கள் கண்களில் கண்ணீர் அருவியாய் வழிந்தோடியது ... மரங்களின் சாபத்துக்கு பரிகாரமாய் அவை செத்த 16 வது நாளில் மரணமுற்ற ஆன்மாக்களுக்கு மனிதர்களை படையலிட்டோம் , பெருமதிப்புக்குறிய அரசியாரே ! மனித தலைகள் உருண்டோடியது ஏனோ அத்தனை சுவையான...

மீசை என்பது வெறும் மயிர் – சந்திப்பு, நேர்காணல், நாவல் சுருக்கம்

அன்புக்குரிய பீம்தாஸ்,      உங்கள் புத்தகத்தை படித்து முடித்த அடுத்த சில நிமிடங்களில், உங்களுடன் பல விடயங்களை பகிர்ந்துக்கொள்ள தன்னெழுச்சியாக எழுதப்படும் இக்கடிதம் பேச வந்ததை பேசாமல், உங்களின் சந்திப்பு குறித்தோ, நேர்காணல் குறித்தோ, நாவலின் சுருக்கம் குறித்தோ பேசுவதாக அமைந்தால் அதை நீங்கள் ஆதவனிடம் தான் கேட்க வேண்டும். பால்டிக் கடலின் மத்தியில் அமைந்திருக்கும் மனிதர்களால் கைவிடபட்ட அந்த தீவுக்கு இந்த கடிதம் வருமென்றும் அப்படி வரும் இந்த கடிதத்தை கார்ட்னர் உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பார் எனும் நம்பிக்கையிலும் எழுதுகிறேன்.      காவி வண்ணத்திலான தீபகற்ப தேசத்தின் தென் திசையிலிருக்கும் நெருக்கடியான பெருநகரத்தின் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 2வது தளத்தில் இருந்தப்படி இந்த கடிதத்தை எழுதிக்கொண்டிருக்கும் நான் ஒரு பச்சை தமிழன் என்பதை உங்களிடம் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். பச்சை தமிழ் குருதிக்கான ஆதாரத்தை அப்பலோ மருத்துவமனை ‘பச்சை இனகுருதி’ ஆய்வின் முடிவில் எனக்கு வழங்கியது என்பதையும் சொல்லிக்கொண்டு, இந்த தகுதியையும் தூய்மையையும் அடிப்படையாக கொண்டு உங்களுக்கு...

-கிளி சோசியத்தில் இல்லாமல் போன கிளியின் படம்!

          நான் கிளி சோசியக்காரனாக மாறியது மிகவும் எதார்த்தமான ஒரு நிகழ்வு. ஆனால் அந்த சம்பவம் நடந்தன்று நிச்சயமாக தெரியாது நான் கிளி சோசியனாவேனென்று - அந்த கிளி சோசியக்காரன், கிளி எடுத்துப்போட்ட கமலஹாசன் சீட்டை பார்த்து ”கமலு படம் வந்திருக்கு.. உச்ச யோகம்…. மூணுல சனி, ஏழுல சுக்கிரன், ஒன்னுல குரு…நீ பெரிய நடிகனா வருவ தம்பி” என்று சொன்னான். xxxxxxx         அடிவானம் வெளுக்க தொடங்கிய ஒரு அதிகாலையில் தான் நான் திருப்பத்தூர் செல்லும் LRN பஸ்சில் ஏறினேன். அதிகாலை என்பதால் கூட்டம் பெரிதாக இல்லை, இருந்த 10-15 பேரும் தூக்கத்தில் இருப்பதை ஒவ்வொரு தலைகளும் ஒவ்வொரு திசையில் மடங்கி கிடந்ததிலே அறிய முடிந்தது. காலியாக இருந்த ஒரு இருக்கையின் சன்னலோரத்தில் அமர்ந்தேன். சிறிது நேரத்தில் பேருந்தும் வேகமெடுத்தது, மிக வேகமாக முகத்தை தழுவி கடந்துக்கொண்டிருந்த அதிகாலை குளிர் காற்றின் விசையை தாங்க முடியாமல் சன்னல் கண்ணாடிகளை இழுத்து மூடினேன். தலைக்கு மேலிருந்த ஒலி பெருக்கியில் “வந்தேண்டா பால்காரன், பசு மாட்ட பத்தி பாட போறேன்” என்று ரஜினியின் குரலாக SPB பாடிக்கொண்டிருந...