Skip to main content

Posts

Showing posts from March, 2014

புன்னகைக்கும் புத்தன் - மாபெரும் சனநாயகத்தின் சர்வதேச அரசியல் கொள்கைகள்

        நாங்கள் குசால் நகரை அடைந்த அந்த தினத்தில் தான் இந்திய சனநாயகம் தனது 67வது சுதந்திர தினத்தை கொண்டாடிக் கொண்டிருந்தது. கருனாடகத்தின் வீதிகள் எங்கும் மூவர்ண கொடிகள் பட்டொளி வீச காட்சியளித்தன.”பாரத் மாத்தா கி ஜே” குடகு மலைகளின் சிகரங்களில் எதிரொலித்து கொண்டிருந்தது. குசால் நகர் மைசூரிலிருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில், குடகு மலைகளின் அடிவரத்தில் இருக்கும் ஒரு மலை ஊர். அங்கிருந்து தான் தங்க கோவிலுக்கு போக வேண்டும், சிறு பிள்ளைகள் கூட ”கோல்டன் டெம்பல்” என்று கேட்டால் வழி சொல்கிறார்கள். ஆட்டோவில் 5-6 கிலோமீட்டர் பயணம்…பைலாகுப்பே எனும் கிராமத்தை அடைகிறோம். நாம்ட்ரோலிங் மடத்தின் (Namdroling Monastery) பிரமாண்ட நுலைவாயில் என்னையும், தோழியையும் புன்னகையுடன் வரவேற்றது. அதுதான்"கோல்டன்டெம்பல் " என்று சொல்லப்படும் புத்த கோவிலின் வாசல்.கோவிலாக மட்டும் இல்லாமல் பௌதத்தை போதிக்கும் கல்வி நிலையாமாகவும் இருக்கிறது என்பதை உள்ளே சென்றவுடனே உனர்ந்தோம்..ஒரு தத்துவதை எப்படி கற்பிக்க முடியும் எனும் என் கேள்விக்கு, மதத்தை கற்பிக்க முடியும் என்று பதில் சொன்னபடியே கைகளை பற்றினார் தோழி. ...