Skip to main content

Posts

Showing posts from April, 2018

பிணை கூட இல்லாமல் சிறையில் இருக்கின்றேன். நான் உண்மையிலேயே குற்றவாளியா? - கபீல் கான்

ஆங்கில வழி மொழியாக்கம் - எல்.ஜே.வைலட், இளவேனில் எ ட்டு மாதங்கள், சிறையில் பிணை இல்லாமல் நான் உண்மையிலே குற்றவாளியா? ஒவ்வொரு நொடியும் இன்னும் நினைவில் அப்படியே இருக்கின்றன. அன்று நடந்த ஒவ்வொரு காட்சியும் இன்றும் உயிர்ப்புடன் என் முன் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. சிறை கம்பிகளுக்கு பின்னே மூன்று மாதங்கள் தாங்கவே முடியாத சித்தரவதைகளையும், அவமானங்களையும் கடந்தும் சில வேளை நான் என்னையே கேட்டுக் கொள்கிறேன் - நான் உண்மையிலேயே குற்றவாளியா? என் இதயத்தின் ஆழத்திலிருந்து வரும் ஒரே பதில் இல்லை இல்லவே இல்லை என்பதே. சபிக்கப்பட்ட ஆகஸ்ட் 10 2017 அன்று அந்த வாட்சப் செய்தி என்னை வந்து சேர்ந்ததும் ஒரு மருத்துவனாக, ஒரு தந்தையாக, இந்திய தேசத்தின் பொறுப்பான ஒரு குடிமகனாக என்னால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அனைத்தையும் செய்தேன். திடீரென்று திரவ ஆக்ஸிஜன் தீர்ந்து போனதால் உயிராபத்தில் இருந்த ஒவ்வொரு உயிரையும் காப்பாற்ற முயற்சித்தேன். ஆக்ஸிஜன் இல்லாத காரணத்தால் மரணித்துக்கொண்டிருந்த அப்பாவி குழந்தைகளின் உயிர்களை காப்பாற்ற என்னால் முடிந்த மட்டும் முயற்சித்தேன். நான் பதட்டத்துடன் அனைவரையும் தொலைபேசியில் தொடர்பு கொ...

மரணங்கள்/படுகொலைகள்

மரணம்/படுகொலை 1: கேரளாவில், மது என்னும் தொல்குடி இளைஞர் சோற்றுக்கான பொருட்களைத் திருடிய குற்றத்திற்காய் படுகொலை செய்யப்பட்டார், அவரது மரணம் சமூகத்தின் அறச்சீற்றத்தையும் கிளறிவிட்டது. சமூக ஊடகங்களில் உணவுக்காக ஒருவன் திருடியது குற்றமா, அதற்கு தண்டனை மரணமா என்று நிலைத்தகவல்களையும், ட்வீட்களையும் பதிவு செய்தோம், மது தாக்கப்படும் காணொளியினைப் பகிர்ந்தோம், கைகள் கட்டப்பட்டிருக்கும் மதுவின் சிற்பப் புகைப்படத்தை பகிர்ந்தோம், பினராய் விஜயனும், மம்மூட்டியும் கூட தங்கள் அறச் சீற்றத்தை வெளிப்படுத்தினார்கள். மம்மூக்கா ஒருபடி மேலே சென்று அவனை ஆதிவாசி என்று சொல்லாதீர்கள் அவன் என் சகோதரன் என்றார். இந்த சமூகத்தில் மனிதம் செத்துவிட்டது என்றோம், நாம் அனைவரும் ஒன்றாக அவரவர் குரலில் ஒட்டு மொத்த சமூகத்தையும் குற்றவாளி ஆக்கினோம். மரணம்/படுகொலை 2: விழுப்புரத்தில் தலித் சிறுவன் ஒருவன் கொடூரமாய் படுகொலை செய்யப்படுகின்றான். அவனது சகோதரி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு தாக்கப்படுகின்றார், அவர்களின் தாயும் கடுமையாக தாக்கப்படுகின்றார். அம்மாவும், மகளும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்கின்றனர். ஒர...