Skip to main content

Posts

Showing posts from April, 2021

இங்கு ஒரு விரல் புரட்சி செய்யப்படும்.

ஒ ரு விரல் புரட்சி குறித்து பேசும் போது, இரண்டாயிரம் வருடங்களாக வழக்கில் இருக்கும் ஒரு சொல் குறித்து பேசுவதும் தேவையானதாக இருக்கிறது. அதாவது பூமி தட்டையானது, அண்டத்தின் மையமாக பூமி இருக்கிறது, சூரியன் உட்பட மற்ற அனைத்து நட்சத்திரங்களும் கோள்களும் பூமியை சுற்றி வலம் வருகின்றன என்று உறுதியான நம்பிக்கையை கொண்டிருந்த காலத்தில் இருந்து பயன்பாட்டில் இருக்கும் ஒரு வார்த்தை, இன்றளவும் அதன் வீரியத்தை இழக்காமல் மக்களுக்கான அதிகாரத்தை மக்களின் கைகளில் கொண்டு சேர்க்கும் அனைத்து வலிமையையும் கொண்ட மாபெரும் அரசியல் வடிவம் என்று கொண்டாடப்படுகிறது. மக்களாட்சி அல்லது ஜனநாயகம் என்று சொல்லப்படும் அந்த வார்த்தையின் அபத்தம் என்னவெனில் அறிவியல், பூமி மைய வாதத்தை கடந்து, சூரிய மைய வாதம், குவாண்டம், கருந்துளை, பன்மை அண்டங்கள் எனும் கருத்தியல்கள் ஊடாக பயணித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இன்றளவும் மக்களாட்சி முறையே அரசியல் அமைப்பின் உச்சம் அல்லது அதை தாண்டிய சிறந்த அரசியல் முறையை மனிதர்கள் இன்னும் கண்டடையவில்லை என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். இன்றுவரை அரசியலின் மேன்மைகள் மக்களாட்சி கொள்கைகளை அளவீடுகளாக கொண்டே அண...

போலி செய்திகளின் காலம் அல்லது ஒரே இரவில் கோட்பாட்டு இயற்பியலாளராக மாறுவது எப்படி?

நா ம் போலிச் செய்திகளின் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நம்மைச்சுற்றிப் பல்லாயிரம் கோடிப் போலிச் செய்திகளும், சில ஆயிரம் உண்மைகளும் உண்மை என்று சொல்லப்படுபவையும், காற்றில் உலவிக்கொண்டிருக்கின்றன. 21ஆம் நூற்றாண்டின் தொழில்நுட்பங்கள் போலிகள் நிறைந்த புதிய உலகினை உருவாக்கி இருக்கின்றன என்று அபத்தமாக எழுத முடியாது. ஆனால் 21ஆம் நூற்றாண்டின் செயற்கை நுண்ணறிவு இயந்திரங்களும் சமூக ஊடகங்களும் அவற்றை உருவாக்கிய பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களின் தகவல் வேட்கையும் மனித வரலாற்றின் போக்கை நிர்ணயிக்கும் வலிமை கொண்டதாக மாறியிருக்கும் போலிச் செய்திகளின் உருவாக்கத்தையும் பரவலையும் எளிமையாக்கியிருக்கின்றன. மானிட அறிவின் எல்லைகளை உடைத்து அறிவையும், தகவல் பரிமாற்றத்தையும் கட்டற்ற சனநாயகமாக மாற்றியிருக்கக் கூடிய ஆற்றலைக் கொண்ட மெய் நிகர் உலகம், வரலாற்றின் துயராக, செயற்கை நுண்ணறிவு இயந்திரங்களின் தகவல் வேட்கையின் பொருட்டு அறிவுக்கு எதிரான போலிகளின் திசையில் பயணிக்கின்றது. அப்படி பல்கிப் பெருக்கும் போலி தகவல்களின் பலிகடாக்களாக நாம் ஒவ்வொரு நாளும் மாறுகின்றோம். தகவல் தொழில்நுட்ப உலகம் உருவாகுவதற்கு முன்பும்...